படையின் செயல்

349.எனவெ டுத்துரைத் ததிச யித்துநின்
      றினைய மண்ணுளோர் அனைய விண்ணுளோர்
மனந டுக்குறப் புறம்ம றைத்தவான்
     மாதி ரங்களைச் சாது ரங்கமே.

    (பொ-நி.)  மண்ணுளோர்  விண்ணுளோர்  உரைத்து, நின்று; நடுக்குற,
சாதுரங்கம், புறம்மறைத்த; (எ-று.)

     (வி-ம்.) இனைய-இந்த. அனைய-அந்த. பொறை-மனத்தைப் போர்மேற்
செல்ல  விடாது  தடுத்து நிறுத்தல்.  மாதிரம்-திசை.  சாதுரங்கம்-நால்வகைச்
சேனை. வான்புறத்தையும் மாதிரப் புறத்தையும் சாதுரங்கம் மறைத்தன.
                                                         (38)