காமமயக்கநிலை கூறி விளித்தது 35. | நனவினிற் சயதரன் புணரவே பெறினுநீர் | | நனவெனக் தெளிவுறாது அதனையும் பழையஅக் கனவெனக் கூறுவீர் தோழி மார் நகைமுகங் கண்டபின் தேறுவீர் கடைதிறந் திடுமினோ. |
(பொ-நி) புணரவே பெறினும், நனவெனத் தெளிவுறாது, கனவெனக் கூறுவீர்; நகைமுகம் கண்டபின் தேறுவீர் திறந்திடுமின், (எ-று.)
(வி-ம்.) நனவு - விழித்திருக்கும் நேரம். சயதரன்-குலோத்துங்கன். தெளிவுறாது - தெளியாமல். அது - புணர்ச்சி. நகை -நனவைக் கனவெனக் கூறியதைக்கேட்டு எள்ளி ஆடிய நகை. தேறுவீர்- தெளிவீர். நனவையும் கனவென மயங்கினர். இவ்வாறு மயங்கக்காரணம் பழைய கனவை இடைவிடாது எண்ணியிருந்தமையே என்க. (15) |