யானைப்படையின் சிறப்பு 350. | கடல்க ளைச்சொரி மலையுள எனஇரு | | கடத டத்திடை பொழிமத முடையன கனல்வி ளைப்பன முகிலுள எனவிழி கனல்சி னத்தன கரியொடு பரிகளின். உடல்பி ளப்பன பிறைசில வுளஎன உயர்ம ருப்பின உலகுகள் குலைதர உருமி டிப்பன வடவனல் உளவென ஒலிமு கிற்கட கரிகளும் மிடையவே. |
(பொ-நி.) பொழி மதமுடையன, விழிகனல் சினத்தன, உயர் மருப்பின, முகில் கடகரிகளும் மிடைய; (எ-று.) (வி-ம்.) கடல் - கடல்நீர். கடம் - யானையின் கன்னம். கனல்-நெருப்பு. முகில் - மேகம். பிளப்பனவாகிய பிறை என்க. மருப்பு-யானையின் தந்தம். உரும் - இடி. இடிப்பன (ஆகிய) முகில் என இயைக்க. வட அனல்- வடவைக்கனல்.என என்று சொல்லும்படி இருக்கின்ற. கடகரி-மதயானை. (39) |