குதிரைப் படையின் சிறப்பு 351. | முனைகள் ஒட்டினர் முடியினை யிடறுவ | | முடியின் முத்தினை விளைபுக ழெனநில முதுகில் வித்துவ நிலமுறு துகளற முகின்மி திப்பன முகில்விடு துளியொடு கனைக டற்றிரை நிரையென விரைவொடு கடலி டத்தினை வலமிடம் வருவன கடலி டத்திறும் இடியென அடியிடு கவன மிக்கன கதழ்பரி கடுகவே. | (பொ-நி.) முடியினை இடறுவ, முத்தினை வித்துவ, முகில் மிதிப்பன, இடத்தினை வலம் இடம் வருவன, கவனம் மிக்கன, பரிகடுக: (எ-று.) (வி-ம்.) முனை-போர்முனை. ஒட்டினர்-சூளுரைத்தோர். முடி-தலை. முடி-தலையணி. இடறுவ-எற்றுவன. விளைபுகழ்-பெருகுகின்ற தன் புகழ். நிலமுதுகு-நிலத்தின் மேற்புறம். வித்துவ-விதைப்பன. துகள்-புழுதி. முகில்- மேகம். திரைநிரை-அலையின் வரிசை. கடலிடம்-கடலால் சூழப்பட்ட உலகம். இறுத்தல்-வந்து பொருந்துதல். கவனம்- நடை. கதழ்வு-விரைவு. பரிகடுக- குதிரைகள் செல்ல. (40) |
|
|