குதிரையின் செயல்

355.உகத்தின் முடிவினில் உகைத்த கனைகடல்
      உவட்டி யெனமுகில் முகட்டின்மேல்
நகைத்த விடுபரி முகக்கண் நுரைசுர
     நதிக்கண் நுரையென மிதக்கவே.

     (பொ-நி.) கனைகடல் உவட்டி என, முகில் முகட்டின்மேல், நகைத்தபரி
முகக்கண் நுரை, சுரநதிக்கண் நுரை என மிதக்க; (எ-று.)

     (வி-ம்.) உகம்-ஊழிக்காலம.்  உகைத்தல்-மேலெழுப்புதல்.  உவட்டுதல்-
மேலெழுதல். முகில்-மேகம். முகடு-உச்சி. நகைத்த-விளங்கித் தோன்றிய. பரி-
குதிரை.  முகக்கண்  - முகத்தில். சுரநதி - கங்கையாறு,  குதிரைகள்  முகின்
முகடுவரை பாய்ந்து வாயில் நுரை தோன்ற நின்றன என்க.         (44)