இதுவும் அது 359. | அதிர்ந்தன நாலு திசைகள் | | அடங்கின ஏழு கடல்கள் பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம். |
(பொ-நி.) திசைகள் அதிர்ந்தன; கடல்கள் அடங்கின. மலைகள் பிரிந்தன; தூளி படலம் பிறந்தது; (எ-று.) (வி-ம்.) அடங்கின - ஒலியடங்கின. பிதிர்தல்-சிதறுதல். மூரி-வலிமை. தூளிபடலம்-புழுதியின் கூட்டம். (48) |