இதுவும் அது 368. | வயலா றுபுகுந் துமணிப் புனல்வாய் | | மண்ணா றுவளங் கெழுகுன் றியெனும் பெயலா றுபரந் துநிறைந் துவரும் பேரா றுமிழிந் ததுபிற் படவே. |
(பொ-நி.) வயலாறு புகுந்து, மண்ணாறும் குன்றியெனும் பெயலாறும், பேராறும் பிற்பட இழிந்தது (சேனை); (எ-று.) (வி-ம்.) வயலாறு-வயல்வழி. மணிப்புனல்-தெளிந்தநீர். வாய் மண்ணாறு: வினைத்தொகை. வாய்தல்-பொருந்துதல். கெழு-பொருந்திய. பெயலாறு-மழை பெயலால் வற்றாமற்பெருகிவரும் ஆறு. பரந்து-பரவி. பேராறு-கிருஷ்ணா நதி. இழிந்தது-கடந்து சென்றது. (57) |