கலவி மயக்கநிலை கூறி விளித்தது 37. | போக அமளிக் களிமயக்கில் | | புலர்ந்த தறியா தேகொழுநர் ஆக அமளி மிசைத்துயில்வீர் அம்பொற் கபாடம் திறமினோ. |
(பொ-நி.) களி மயக்கில், புலர்ந்த தறியாதே, ஆகஅமளி மிசைத் துயில்வீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) போகமயக்கு என இயைக்க. போகம் -கலவி இன்பம். அமளி - படுக்கை. களிமயக்கு -கள்ளுண்டது போன்ற மயக்கு. புலர்தல் - விடிதல். கொழுநர் - கணவர். ஆகம்-மார்பு. துயில் - தூக்கம். விடிந்தது தெரியாமல் கணவர் மார்பிடத்தே தூங்கினர் என்க. (17) |