கலிங்கர் நிலை

371.கங்கா நதியொரு புறமா கப்படை
      கடல்போல் வந்தது கடல்வந்தால்
எங்கே புகலிடம் எங்கே யினியரண்
     யாரே அதிபதி யிங்கென்றே.

     (பொ-நி.)  படைகடல்போல்   வந்தது;   கடல்   வந்தால்   இங்கே
புகலிடமெங்கே, அரண் எங்கே அதிபதி யார் என்று; (எ-று.)

     (வி-ம்.) கடல்போல்  வந்தபடையாதலின், அதன் பெருக்கத்தால், அது வடக்கின்கண்    கங்கையும்    அணித்தாம்படி    பரவி    நின்றதுபோல் காணப்பட்டதென்க. புகல்இடம் - செல்லுதற்கேற்ற  இடம். அரண்-பாதுகாவல். அதிபதி-அரசன்.                                           (60)