கலிங்கர் அரசனிடம் முறையிட்டது

373.உலகுக் கொருமுதல் அபயற் கிடுதிறை
      உரைதப் பியதெம தரசேயெம்
பலகற் பனைகளை நினைவுற் றிலைவரு
     படைமற் றவன்விடு படையென்றே.

     (பொ-நி.)   அரசே,   இடுதிறை  உரைதப்பியது;  எம் கற்பனைகளை
நினைவுற்றிலை; வருபடை அவன் விடுபடை என்று; (எ-று.)

     (வி-ம்.)  உலகுக்கு  ஒரு  முதல் - உலகத்துக்கு  ஒப்பற்ற  தலைவன்.
அபயன்   - (குலோத்துங்க)  சோழன்,    பயமில்லாதவன்  என்று பொருள்;
சோழமன்னன்   யார்க்கும்      அஞ்சாதவனாகலான்,        இப்பெயரால் 
அழைக்கப்பெற்றான். உரை தப்பியது -சொல்தப்பியது. கற்பனை  முன்னறிந்து 
சொல்லிய  சொல். அவன்: குலோத்துங்கன்.                     (62)