கேட்ட கலிங்க வேந்தன் செயல்

375.அந்தரமொன் றறியாத வடகலிங்கர்
      குலவேந்தன் அனந்த பன்மன்
வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக்
     கைபுடைத்து வியர்த்து நோக்கி.

     (பொ-நி.)  அறியாத   வேந்தன்  அனந்த  பன்மன்  வெய்துயிர்த்து,
கைபுடைத்து வியர்த்து நோக்கி; (எ-று)

     (வி-ம்.) அந்தரம்-முடிவு.  தறுகண்-கொடுமை  மிக்க. வெகுளி-சின்னம்.
வெய்து உயிர்த்து-பெருமூச்சுவிட்டு. கைபுடைத்து-கைகொட்டி.       (64)