கலிங்க வேந்தன் மொழிந்தது

376.வண்டினுக்கும் திசையானை மதங்கொடுக்கும்
      மலர்க்கவிகை அபயற் கன்றித்
தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு
     தடம்புயங்கள் குலுங்க நக்கே.

     (பொ-நி.) கொடுக்கும் அபயற்கன்றி,  தண்டினுக்கும்  எளியனோ  என
வெகுண்டு நக்கு, (எ-று.)

     (வி-ம்.) யானை  மதம்:  ஆறன்   தொகை.  மலர் கவிகை - பரந்த
வெண்கொற்றக்குடை.   கொடுக்கும்   அபயன்  என்க.   இதனால்  அவன்
அரசாட்சியின் பரப்புக் கூறியவாறாம். தண்டு -(அவனது) சேனை. தடம்புயம்-
பெருத்த தோள்கள்.                                       (65)