இதுவும் அது

387.உழந்து தாமுடை மண்டலந் தண்டினால்
  இழந்த வேந்த ரெனையரென் றெண்ணுகேன்.

     (பொ-நி.)  மண்டலம் தண்டினால்  இழந்த வேந்தர் எனையர் என்று
எண்ணுகேன்; (எ-று.)

     (வி-ம்.)  தாம்  உழந்து  உடை  என  இயைக்க.  உழந்து - வருந்தி.
மண்தலம் - மண்ணுலகம். எனையர்-எத்துணையர். எண்ணுகேன்-கணக்கிட்டுச் சொல்வேன்.                                               (76)