இதுவும் அது

388.கண்டு காணுன் புயவலி நீயுமத
 தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே.

     (பொ-நி.) தண்டுகொண்டு  சக்கரம்  வந்தது, நீயும்கண்டு உன் புயவலி
காண்; (எ-று.)

     (வி-ம்.) கண்டு  போர்  செய்து  கண்டு.  தண்டுகொண்டு-படைகளைத்
திரட்டிக்கொண்டு. சக்கரம்-திருமாலின் சக்கரம் போன்ற கருணாகரன்.
                                                         (77)