கொங்கையின் அழகு கூறி விளித்தது 39. | உந்திச் சுழியின் முளைத்தெழுந்த | | உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு அந்திக் கமலங் கொடுவருவீர் அம்பொற் கபாடம் திறமினோ. |
(பொ-நி) உந்திச் சுழியின் எழுந்த பசுந்தாள் ஒன்றில் இரண்டு அந்திக் கமலம் கொடு வருவீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.) உந்திச்சுழி-கொப்பூழ். உரோமம்-மயிரொழுங்கு. தாள்-தண்டு. அந்திக்கமலம்-மாலையில் காணப்படும் தாமரைமொட்டுப் போன்ற கொங்கைகள். கொடு (இடைக்குறை)-கொண்டு. ஒரு தண்டில் இரண்டு கமலம் போன்றன கொங்கைகள். (19) |