கேட்ட கலிங்கர்கோன் மொழிந்தது

390.என்றிவையு ரைத்தலுமெ னக்கெதி
      ருரைக்கஇமை யோர்களு நடுங்கு வர்புயக்
குன்றிவைசெ ருத்தொழில் பெறாதுநெடு
     நாள்மெலிவு கொண்டபடி கண்டு மிலையோ.

     (பொ-நி.)  உரைத்தலும்,  எதிர் உரைக்க இமையோர்களும் நடுங்குவர்;
இவைதொழில் பெறாதுமெலிவு கொண்டபடி கண்டு மிலையோ? (எ-று.)

     (வி-ம்.) எதிர்  உரைத்தல் - மாறுபட்டுக்கூறல்.  இமையோர் - தேவர்.
புயக்குன்று-தோளாகியமலை. நெடுநாள்மெலிவு-நீண்டநாட்களாக வாடியிருத்தல்.
பலகாலமாகப்  போரின்றி  இருந்ததால்  தன்தோள்களை  வாடியிருப்பதாகக்
கூறினான். இதனைப்  'போரென்ன  வீங்கும்  பொருப்பன்ன  பொலன்கொள்
திண்தோள்மாரன் அனையான்' என்பர் கம்ப நாடர்.               (79)