கலிங்கப்படை எழுந்த ஆர்ப்புக் கூறியது 395. | கலிங்கமவை யேழினு மெழுந்ததொரு | | பேரொலி கறங்குகட லேழு முடனே மலங்கியெழு பேரொலி யெனத்திசை திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே. |
(பொ-நி.) கலிங்கமேழினும் எழுந்த பேரொலி, கடல் ஏழும் ஏழு பேரொலியென, திசை திகைப்புற வரும், தொனி எழுந்த பொழுது; (எ-று.) (வி-ம்.) கலிங்க நாடு ஏழு பிரிவாய் அமைந்திருந்ததென்க. கறங்கு கடல்- ஒலிக்கின்ற கடல். மலங்குதல்-கலங்குதல். திசை; இடவாகு பெயர். திகைப்பு - திக்குமுக்காடிப் போதல். தொனி-ஓசை. (84) |