படை எழுச்சி கூறியது

396.தொளைமுக மதமலை யதிர்வன
      தொடுகடல் பருகிய முகிலெனவே
வளைமுக நுரையுக வருபரி
     கடலிடை மறிதிரை யெனவெழவே.

     (பொ-நி.) மதமலை  அதிர்வன,  முகிலென ( எழ), வருபரி மறி திரை
என எழ; (எ-று.)

     (வி-ம்.)   தொளை   முகம்  -  முகத்தே   தொளை    பொருந்திய துதிக்கையுடையது. மதமலை -யானை. அதிர்வன முகிலென்று   தோன்றும்படி (போர்க்கு)  எழுந்தன  என்க.  வளை  முகம் - வளைந்த வாய். பரி-குதிரை.
மறிதல்-சுருண்டு விழுதல். திரை-அலை. எழ-(போர்க்கு) எழ.
                                                        (85)