இதுவும் அது

397.இடையிடை யரசர்கள் இடுகுடை
      கவரிகள் இவைகடல் நுரையெனவே
மிடைகொடி பிறழ்வன மறிகடல்
     அடையவும் மிளிர்வன கயலெனவே.

     (பொ-நி.) குடை, கவரிகள், இவை  கடல் நுரை என, கொடி பிறழ்வன,
மிளிர்வன கயல் என; (எ-று.)

     (வி-ம்.) அரசர்கள் இடுகுடை: நான்கன் தொகை.  இடுகுடை-அணிபெற
இட்ட குடைகள். கவரிகள்-வெண்சாமரைகள்.  மிளிர்வன ஆகிய கயல் என்க.
குடைகளும்   கவரிகளும்  கடல்நுரையையொத்தன;  மிடைகொடி-நெருங்கிய
கொடிகள்;  பிறழ்வன-அசைவன.  கொடிகள்  பிறழ்கின்ற மீன்கள் யொத்தன
என்க.                                                   (86)