இதுவும் அது 399. | விசைபெற விடுபரி இரதமும் | | மறிகடல் மிசைவிடு கலமெனவே இசைபெற உயிரையும் இகழ்தரும் இளையவர் எறிசுற வினம் எனவே. |
(பொ-நி.) இரதமும், கடல்மிசைவிடு கலமென, இளையவர் சுறவினம் என; (எ-று.) (வி-ம்.) விசை பெற-விரைவு கொள்ள. பரி-குதிரை. மிசைவிடு-மேலே விட்ட. கலம் - மரக்கலம். உயிரையும் இகழ்தரும் - தம் உயிரைக்கூடப் பொருட்படுத்தாத. இதனைச், 'சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்' என்பர், வள்ளுவர். இளையவர்-வீரர்கள். சுறவு-சுறாமீன். இனம்-கூட்டம். (88) |