பெண்கள் வேளம் புகுந்த தன்மை கூறி விளித்தது

40. மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக ஓடிக்
  கானம்புக வேளம்புகு மடவீர் கடை திறமின்.

     (பொ-நி.) மீனவர்  ஓடிக்கானம்புக,  வேளம்புகு  மடவீர்  திறமின்;
(எ-று)

     (வி-ம்.) மீனம்புகு  கொடி - மீன்  வடிவெழுதிய கொடி.  மீனவர்-
பாண்டியர். விழி-கண்.  அம்பு-நீர்.  கானம்-காடு.  வேளம் - சிறைப்பட்ட
மகளிர் வாழும் அரண்மனை. மடவார்-பெண்கள்.  பாண்டியர் தோற்றோட
அவர்   நாட்டுப்   பெண்கள்   வேளம்  புகுந்தனர்.  தோற்ற அரசரின்
மகளிரைச்  சிறை  பிடித்துத்  தனியிடத்தில்  அடைப்பது  பண்டைக்கால
மன்னரின் வழக்கு.                                          (20)