போரின் கடுமை 409. | விளைகனல் விழிகளின் முளைக்கவே | | மினலொளி கனலிடை எறிக்கவே வளைசிலை யுருமென இடிக்கவே வடிகணை நெடுமழை படைக்கவே. |
(பொ-நி.) விழிகளின் கனல் முளைக்க, கனலிடை ஒளி எறிக்க, சிலை இடிக்க, கணை மழை படைக்க; (எ-று.) (வி-ம்.) கனல்-சினத்தீ. மினல் ஒளி-மின்னல்போன்ற ஒளி. சிலை-வில். உரும்-இடி. வடி-கூர்மை. கணை-அம்பு. படைக்க-உண்டாக்க. வீரர் விழிகளில் தோன்றிய கனலில் மின்னலொளி தோன்றிய தென்க. வில் இடியையுண்டாக்க. அம்பு மழையையுண்டாக்கின வென்க. (6) |