குருதியாற்றியல்பு

 
410.குருதியின் நதிவெளி பரக்கவே
      குடையினம் நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுடல் அடுக்கியே
     கரைஎன இருபுடை கிடக்கவே.

     (பொ-நி.) குருதியின் நதி பரக்க,  குடை இனம் நுரைஎன மிதக்க, கரி
உடல் இருபுடை கரை என, கிடக்க; (எ-று.)

     (வி-ம்.) குருதி-செந்நீர். வெளி-வெற்றிடமெல்லாம்.  பரக்க-பரவிப்பாய.
குடை-வெண்கொற்றக்குடை. கரி-யானை. துணித்தல்-வெட்டுதல். புடை-பக்கம்.
வெட்டப்பட்ட   யானையுடல்கள்  குருதியாற்றின்   இருபுறமும்  கரையைப்
போன்றுகிடந்தன வென்க.                                     (7)