யானையொடு பொருவோர் இயல்பு 416. | களமுறு துரகக ணத்தின்மு கத்தெதிர் | | கறுவிலர் சிலர்கல வித்தலை நித்தில இளமுலை எதிர்பொரும் அப்பொழு திப்பொழு தெனவெதிர் கரியின்ம ருப்பின்முன் நிற்பரே. |
(பொ-நி.) சிலர், துரக கணத்தின் முகத்து; கறுவிலர், இளமுலை எதிர்பொரும் அப்பொழுது, இப்பொழுதென, கரியின் மருப்பின்முன், நிற்பர்; (எ-று.) (வி-ம்.) களம்-போர்க்களம். துரகம்-குதிரை. கணம்-கூட்டம், கறு-சினம். கலவி-புணர்ச்சி. நித்திலம்-முத்து. கரி-யானை. மருப்பு-தந்தம். சிலர் குதிரை முகத்து நிற்றிலை வெறுத்து யானை முகத்து நின்றனர் என்க. (13) |