குலோத்துங்கன் திருமாலேயாகக் கூறிக் குற்றியது 542. | நாற்கடலைக் கவித்தகுடை நரதுங்கன் அமுதமெழப் | | பாற்கடலைக் கடைந்தருளும் பணைப்புயம்நூ றாயிரமே. | (பொ-நி.) நரதுங்கன் பாற்கடலைக் கடைந்தருளும் புயம் நூறாயிரம்; (எ-று.) (வி-ம்.) நால் - நான்கு; ஈண்டு ஆகுபெயராக நான்கு திசைகளையும் குறித் தது. குடை - வெண்கொற்றக்குடை. நரதுங்கன்- மக்களிற் சிறந்தவனான குலோத்துங்கன். பணை - பருமை. புயம் - தோள். நூறு ஆயிரம் -பல: பல என்னும் எண்ணுப் பெயர், பலதோள்களுக்குரிய வலிமை பெற்றதென்க. குலோத்துங்கன் தோளாற்றலைக் குறித்தது. (71) |