குலோத்துங்கன் திருமாலேயாகக் கூறிக் குற்றியது

542.நாற்கடலைக் கவித்தகுடை நரதுங்கன் அமுதமெழப்
 பாற்கடலைக் கடைந்தருளும் பணைப்புயம்நூ றாயிரமே.

     (பொ-நி.) நரதுங்கன்  பாற்கடலைக்  கடைந்தருளும் புயம் நூறாயிரம்;
(எ-று.)

     (வி-ம்.) நால் - நான்கு;  ஈண்டு ஆகுபெயராக நான்கு திசைகளையும்
குறித் தது. குடை - வெண்கொற்றக்குடை. நரதுங்கன்- மக்களிற் சிறந்தவனான
குலோத்துங்கன்.  பணை - பருமை. புயம் - தோள். நூறு ஆயிரம் -பல: பல
என்னும்  எண்ணுப்  பெயர்,  பலதோள்களுக்குரிய   வலிமை பெற்றதென்க.
குலோத்துங்கன்  தோளாற்றலைக்  குறித்தது.                       (71)