யானை மத்தகம் பிளந்தமை
 
429.வெங்க ளிற்றின் மத்த கத்தின்
      வீழு முத்து வீரமா
மங்கை யர்க்கு மங்க லப்பொ
     ரிச்சொ ரிந்த தொக்குமே.

     (பொ-நி.)  மத்தகத்தின்  வீழும் முத்து, பொரி  சொரிந்த தொக்கும்;
(எ-று.)

     (வி-ம்.) மத்தகத்தின்-மத்தகத்தினின்றும்,  வீர  மா  மங்கையர்-வெற்றி
மடந்தையர். வீரமங்கையரை வீரர் போர்க்களத்தில் மணம்  புரிந்தனர் என்க.
மங்கலம் - மணவினை பொரி -நெற்பொரி (மணக்காலத்துச் சொரியப்படுவது).
வீரர்யானை மத்தகத்தைப்பிளந்ததால் முத்துக்கள் சிந்தின என்க.
                                                        (26)