வாட்போர்

439.இருவருரத் தின்உற்ற சுரிகையின்
      எதிரெதிர்புக் கிழைக்கு மளவினில்
ஒருவரெனக் கிடைத்த பொழுதினில்
     உபயபலத் தெடுத்த தரவமே.

     (பொ-நி.) இழைக்கும் அளவினில், இருவர் உரத்தின் உற்ற சுரிகையின்,
ஒருவர் என, கிடைத்தபொழுதினில், அரவம் எடுத்த; (எ-று.)

     (வி-ம்.) உரம் -மார்பு. சுரிகை - உடைவாள். இழைத்தல்-போர்செய்தல்.
கிடைத்தல்-இயைதல்.  ஒருவர்  வாள்மற்றொருவர் மார்பிலே  புக, இருவரும்
ஒருவரேபோல் தோன்றினர் என்க. உபயம்-இரண்டு. பலம்-சேனை. எடுத்தது-
தோன்றியது; அரவம்-ஒலி.                                   (36)