ஊடலும் கூடலும் விழைந்த இயல்பு கூறி விளித்தது 44. | தழுவுங் கொழுநர் பிழைநலியத் | | தழுவேல் என்னத் தழுவியகை வழுவ உடனே மயங்கிடுவீர் மணிப்பொற் கபாடம் திறமினோ. | (பொ-நி.) கொழுநர் பிழை நலிய, தழுவேல் என்ன! தழுவியகை வழுவ, மயங்கிடுவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) கொழுநர் - கணவர். நலிய-வருத்த. என்ன-என்ன; என்று கணவரை நோக்கிக்கூற. கை-கணவர் கை. வழுவ -நழுவ. மயங்கிடுவீர் -(புணர்ச்சி விருப்பால்). மயங்குவீர் மணிப்பொன்-அழகிய பொன்னாலான. ஊடலால் தழுவேல் எனவும் கணவர் தழுவுதல் ஒழியப், புணர்ச்சி விருப்பால் மனம் வருந்தினர் என்க. (24) |