| 	     ஊடலும் கூடலும் விழைந்த இயல்பு கூறி விளித்தது	 | 	44. | 	தழுவுங் கொழுநர் பிழைநலியத் |  |   | 	தழுவேல் என்னத் தழுவியகை     	வழுவ உடனே மயங்கிடுவீர்        மணிப்பொற் கபாடம் திறமினோ. |        		   (பொ-நி.)    கொழுநர்  பிழை  நலிய, தழுவேல்  என்ன!  தழுவியகை      வழுவ, மயங்கிடுவீர் திறமின்; (எ-று.)	       		   (வி-ம்.)    கொழுநர் - கணவர்.  நலிய-வருத்த.  என்ன-என்ன; என்று     கணவரை  நோக்கிக்கூற.  கை-கணவர் கை.  வழுவ -நழுவ. மயங்கிடுவீர்     -(புணர்ச்சி விருப்பால்). மயங்குவீர் மணிப்பொன்-அழகிய பொன்னாலான.     ஊடலால்  தழுவேல்  எனவும்  கணவர்  தழுவுதல்  ஒழியப்,    புணர்ச்சி         விருப்பால்  மனம்  வருந்தினர்  என்க.    (24) |