வீரன் யானைப்படையானோடு பொருத்து
 
442.அமர்புரி தமதக லத்தி டைக்கவிழ்
      அடுகரி நுதலில டிப்பர் இக்களி
றெமதென இருகண்வி ழிக்க உட்கினர்
     எனவிடு கிலர்படை ஞர்க்கு வெட்கியே.

     (பொ-நி.)  அகலத்திடைக்   கவிழ்   கரிநுதலில்  அடிப்பர்;  வெட்கி,
கண்விழிக்க உட்கினர் என விடுகிலர்; (எ-று.)

     (வி-ம்.) அமர் - போர். அமர்புரி  கரி  என இயைக்க. அகலம்-மார்பு. கவிழ்- தாக்குதற்குக் கவிழ்ந்த. கரி-யானை. நுதல்-முகம். உட்கினர்-அஞ்சினர். "என உட்கினர்"  யானை  வீரர்.  படைஞர்க்கு - படைவீரர்கட்கு. வெட்கி -
வெட்கங்கொண்டு.  விடுகிலர் - படைவிடுகிலர். அஞ்சிக்  கண்மூடியமையின்
அவர்மீது படை விடுகிலர் வீரர் என்க.
                                                         (39)