கலிங்க வேந்தன் பொருதலாற்றாது ஒதுங்கியமை

448. புரசை மதமலை ஆயி ரங்கொடு
       பொருவ மெனவரும் ஏழ்க லிங்கர்தம்
அரசன் உரைசெய்த ஆண்மை யுங்கெட
     அமரில் எதிர்விழி யாதொ துங்கியே.

    (பொ-நி.)  மதமலை  ஆயிரம்  கொடு வரும் அரசன்,  ஆண்மையும்
கெட எதிர் விழியாது ஒதுங்கி; (எ-று.)

     (வி-ம்.) புரசை- யானைக்கழுத்திடு கயிறு. மதமலை-யானை. பொருவம்-
போர்செய்வோம். அரசன்:  அனந்தபதுமன்.  உரைசெய்த-தான்  உரைசெய்த.
அமரில்-போர்க்களத்தில். எதிர் விழியாது-முகத்தைப் பார்க்காமல்.
                                                         (45)