கலிங்கர் சிதைந்தோடியது 451. | வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி | | மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம் இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒருவழி போகல் இன்றியே. | (பொ-நி.) ஒருவழி போகல் இன்றி, சிலர் வழிவர்; சிலர் கடல் பாய்வர்; கரிமறைவர்; சிலர் பிலம் இழிவர்; சிலர் தூறு மண்டுவர்; (எ-று.) (வி-ம்.) வழிவர்-நழுவி ஓடுவர். கரி-யானையுள். பிலம் -மலைக்குகை. இழிவர்-இறங்குவர். தூறு-புதர். மண்டுதல்-நெருங்குதல். (48) |
|
|