இதுவும் அது
 
452.ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
      உடலின் நிழலினை ஓட அஞ்சினர்
அருவர் வருவரெ னாவி றைஞ்சினர்
     அபயம் அபயமெ னாந டுங்கியே

     (பொ-நி.) ஓடமுந்தினர்; நிழலினை அஞ்சினர்;  நடுங்கி  இறைஞ்சினர்; (எ-று.)

     (வி-ம்.) முந்தினர் - முற்பட்டனர்.  ஓட,  நிழலினை  அஞ்சினர் என இயைக்க.  அச்சமிகுதியால்  தந்நிழலையும் கண்டு அஞ்சினர் என்க.அருவர்- தமிழர். இறைஞ்சினர்-வணங்கினர்.                            (49)