இதுவும் அது 453. | மழைகள் அதிர்வன போலு டன்றன | | வளவன் விடுபடை வேழம் என்றிருள் முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம் முதுகு செயும்உப கார மென்பரே. |
(பொ-நி.) "வேழம் உடன்றன" என்று முழைகள் நுழைவர்கள்; "முதுகு செயும் உபகாரம்" என்பர்; (எ-று.) (வி-ம்.) மழை - மேகம். உடலுதல் - சினந்தெழுதல். வளவன்- குலோத்துங்கன்.வேழம்-யானை.முழை-மலைக்குகை.முதுகுகாட்டி ஓடினமையின் உயிர் பிழைத்தாராதலால் தம் முதுகைப் பாராட்டினர் என்க. (50) |