இதுவும் அது
 
453.மழைகள் அதிர்வன போலு டன்றன
      வளவன் விடுபடை வேழம் என்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்
     முதுகு செயும்உப கார மென்பரே.

     (பொ-நி.) "வேழம்  உடன்றன" என்று முழைகள் நுழைவர்கள்; "முதுகு
செயும் உபகாரம்" என்பர்; (எ-று.)

     (வி-ம்.) மழை - மேகம்.   உடலுதல்  - சினந்தெழுதல்.   வளவன்-
குலோத்துங்கன்.வேழம்-யானை.முழை-மலைக்குகை.முதுகுகாட்டி ஓடினமையின்
உயிர் பிழைத்தாராதலால் தம் முதுகைப் பாராட்டினர் என்க.       (50)