சோழர்படை யானை குதிரைகளைக் கைபற்றியது
 

455.அப்படிக் கலிங்க ரோட
      அடர்த்தெறி சேனை வீரர்
கைப்படு களிறும் மாவும்
     கணித்துரைப் பவர்கள் யாரே?

     (பொ-நி.) கலிங்கர்  ஓட  எறிவீரர், கைப்படு களிறும் மாவும் கணித்து
உரைப்பவர்கள் யார்? (எ-று.)

     (வி-ம்.) ஓட - ஓடுமாறு. அடர்த்து  எறி-நெருங்கிக் கொன்ற. கைப்படு-
கையில் அகப்பட்ட. களிறு - ஆண்யானை. மா-குதிரை. கணித்தல்-அளவிடல்.
                                                        (52)