கைப்பட்ட களிறுகளின் தன்மை 456. | புண்தரு குருதி பாயப் | | பொழிதரு கடமும் பாய வண்டொடும் பருந்தி னோடும் வளைப்புண்ட களிற நேகம். |
(பொ-நி.) குருதிபாய, கடமும் பாய, வண்டொடும் பருந்தினோடும் வளைப்புண்ட களிறு அநேகம்; (எ-று.) (வி-ம்.) குருதி-செந்நீர். கடம்-மதநீர். வளைப்புண்ட-சூழப்பட்டிருக்கின்ற. குருதியைக் கண்டு பருந்துகளும், மதநீரைக் கண்டு வண்டுகளும் தாம் தாம் உண்பதற்குச் சுற்றின. ஆதலால் இவ்வாறு கூறினார். (53) |