இதுவும் அது
 
458.வரைசில புலிக ளோடு
      வந்தகட் டுண்ட வேபோல்
அரசருந் தாமும் கண்டுண்டு
     அகப்பட்ட களிற நேகம்.

     (பொ-நி.)புலிகளோடு  வரை  கட்டுண்டவேபோல அரைசரும் தாமும்
கட்டுண்டு அகப்பட்ட களிறு அநேகம்; (எ-று.)

     (வி-ம்.) வரை - மலை. அரைசர்:  போலி  அரசர்.  தாம்: யானைகள்.
மலைகள் யானைக்கும், அரசர்கள் புலிக்கும் ஒப்பாக உவமையுரைத்தார்.
                                                          (55)