துயிலெழுந்த நிலைகூறி விளித்தது 46. | சொருகு கொந்தளகம் ஒருகை மேலலைய | | ஒருகை கீழலைசெய் துகிலொடே திருவ னந்தலினும் முகம லர்ந்துவரு தெரிவை மீர்கடைகள் திறமினோ. |
(பொ-நி.) ஒரு கை மேல், அளகம் அலைய, ஒரு கை கீழ், துகிலொடே, அனந்தலினும் முகமலர்ந்துவரு தெரிவைமீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.) சொருகு-முடிக்கப்படுகின்ற. கொந்து-பூங்கொத்து. அளகம்- கூந்தல். அலைசெய் - அலைபோல் மடிந்து மடிந்து தோன்றும். துகில்- உடை. அனந்தல் - தூங்கியெழுந்த மயக்க நிலையிலும். தெரிவை-பெண். தூக்கம் தெளிந்ததும் ஒரு கை மேலே கூந்தலைத் தாங்க, ஒரு கை கீழே துகிலைத் தாங்கி எழுந்து வந்தனர் என்க. இத் தாழிசையின் முதலடியிலமைந்துள்ள கருத்து 'அகிலேந்து கூந்தல், ஒரு கையில் ஏந்தி அசைந்தொரு கை துகிலேந்தி ' எனத் தஞ்சைவாணன் கோவையினும் வருதல் காண்க. (26) |