கருணாகரன் கலிங்கவேந்தனைக் கொணருமாறு ஏவியது
 
460.இவைக வர்ந்தபின் எழுக லிங்கர்தம்
      இறையை யுங்கொடு பெயர்துமென்று
அவனி ருந்துழி அறிக வென்றனன்
     அபயன் மந்திரி முதல்வனே.

     (பொ-நி.) மந்திரி  முதல்வன்,  இவை  கவர்ந்தபின்,  கலிங்கர்  தம்
இறையையும் கொடுபெயர்து மென்று அவன் இருந்து அறிக என்றனன்; (எ-று.)

     (வி-ம்.)  கலிங்கர்   தம்இறை - அனந்தபதுமன்.  கொடு - கொண்டு.
பெயர்தும் - செல்வோம்.  அவன்:  அனந்தபதுமன்.  உழி-இடம். அபயன் - குலோத்துங்கன்.முதல்வன்: கருணாகரன்.                         (57)