அதுகேட்ட படைஞர் செய்தி 463. | எக்குவடும் எக்கடலும் எந்தக் காடும் | | இனிக்கலிங்கர்க் கரணாவது இன்றே நாளும் அக்குவடு மக்கடலும் வளைந்து வெய்யோன் அத்தமனக் குவடணையும் அளவிற் சென்றே. |
(பொ-நி.) இனி, குவடும் கடலும் காடும் கலிங்கர்க்கு அரணாவது இன்று நாளும் குவடும் கடலும் வளைந்து அத்தமனக்குவடணையு மளவில் சென்று; (எ-று.) (வி-ம்.) குவடு-மலை. இனி-புலன் தெரிந்துவிட்டமையின் இனி. அரண்- பாதுகாவல். இன்று - இல்லை. நாளும் - நாள் முழுதும். அ: கலிங்கநாட்டின் கண்ணவற்றைக் குறித்தது: வளைந்து - சுற்றிச்சுற்றிச் சென்று (கடைசியாக), வெய்யோன் - ஞாயிறு. அத்தமனக்குவடு - மறைகின்றமலை. அஸ்தமனம்- அத்தமனமெனத் தற்பவமாயிற்று. (60) |