குன்று காத்த கலிங்கவீரரை அழித்தமை

465. செம்மலையாய் ஒளிபடைத்த தியாதோ என்றும்
       செங்கதிரோன் உதயஞ்செய்து உதய மென்னும்
அம்மலையோ இம்மலையும் என்னத் தெவ்வர்
     அழிகுருதி நதிபரக்க அறுக்கும் போழ்தில்.

     (பொ-நி.) “இம்மலை,  ஒளி  படைத்தது,  யாதோ?  உதயமென்னும் அம்மலையோ   இம்மலையும்,”   என்ன,  தெவ்வர்   குருதி  நதி  பரக்க, அறுக்கும்போழ்து;  (எ-று.)

      (வி-ம்.) செம்மலை - சிவந்த   நிறமுள்ள   மலை.  யாதோ - யாது
காரணமோ. என்றும்-எந்நாளும். என்ன-என்று கண்டார்  சொல்ல.  தெவ்வர்
-பகைவர்.குருதி-செந்நீர்.  நதி-ஆறு.பரக்க-பரவிப்பாய.  அறுத்தல்-அழித்தல்.
                                                           (62)