இதுவும் அது

467.வேடத்தால் குறையாது முந்நூலாக
       வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந் தகப்பட்டோம் கரந்தோம் என்றே
      அரிதனைவிட்டு உயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே.

     (பொ-நி.)    அநேகர்,   சிலைநாண்  முந்நூலாக  இட்டு  “கங்கை ஆடப்போந்து   கரந்தோம்,  அகப்பட்டோம்“  என்று  உயிர்  பிழைத்தார்;
(எ-று.)

     (வி-ம்.) முந்நூல்-முப்புரியுள்ள பூணூல். சிலை-வில் - நாண் - கயிறு. முடித்திட்டு -  சுருட்டிக்   கட்டி.  விதி - முறைமை.  கரந்தோம் - போர்ப் படையைக்கண்டு மறைந்தோம். அரி-போர்க்கருவி; மலையுமாம்.
                                                           (64)