இதுவும் அது

468. குறியாகக் குருதிகொடி ஆடை யாகக்
      கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்து
அறியீரோ சாக்கியரை யுடைகண் டால்என்
     அப்புறமென் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே.

     (பொ-நி.) அநேகர்,  குறியாக,  குருதிகொடி  ஆடையாக  உடுத்து,
போர்த்து,    முண்டித்து,    “சாக்கியரை   அறியீரோ;   அப்புறம்  என்”
என்றியம்பிடுவர்; (எ-று.)

     (வி-ம்.)   குறி - (புத்த)   அடையாளம்.  குருதி - செந்நீர்.  கொடி
-கொடிச்சீலை. குஞ்சி-முடிமயிர்.  முண்டித்து - மொட்டையடித்து.  சாக்கியர்
-புத்தர். உடைகண்டால்-எம் ஆடையைப்பார்த்தால்.  இயம்பல் - சொல்லல்.
                                                          (65)