இதுவும் அது 468. | குறியாகக் குருதிகொடி ஆடை யாகக் | | கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்து அறியீரோ சாக்கியரை யுடைகண் டால்என் அப்புறமென் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே. |
(பொ-நி.) அநேகர், குறியாக, குருதிகொடி ஆடையாக உடுத்து, போர்த்து, முண்டித்து, “சாக்கியரை அறியீரோ; அப்புறம் என்” என்றியம்பிடுவர்; (எ-று.) (வி-ம்.) குறி - (புத்த) அடையாளம். குருதி - செந்நீர். கொடி -கொடிச்சீலை. குஞ்சி-முடிமயிர். முண்டித்து - மொட்டையடித்து. சாக்கியர் -புத்தர். உடைகண்டால்-எம் ஆடையைப்பார்த்தால். இயம்பல் - சொல்லல். (65) |