இதுவும் அது

469.சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்
      தெலுங்கரேம் என்றுசில கலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்டு
     அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே.

     (பொ-நி.) அநேகர்  “ தெலுங்கரேம், களம்  கண்டேம்,  நினறேம்“
என்று  தாளம்  பிடித்து,  கும்பிட்டு  பாணரெனப்  பிழைத்தார்;  (எ-று.)

     
(வி-ம்.) சேனைமடி - படைகள் இறந்துபட்ட.  தெலுங்கரேம் - யாம்
தெலுங்கு நாட்டினோம். களம்-போர்க்களம். சில மணி என இயைக்க.தாளம்
பிடித்து - தாளமாகக்கொண்டு,  அடி  -  அடிபற்றி   வாழும்.  பாணரென
-பாணரெனக் கண்டார் கொள்ளுமாறு.
                                                          (66)