| நகக்குறி கண்டு களித்தமை கூறி விளித்தது | 47. | முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை | | | முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல் கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின.் | (பொ-நி) யாரேனும் இல்லா இடத்தே, கலை நீவி, முலைமீது நகம் மேவு குறியை, கண்ணுற்று, களிப்பீர்கள் திறமின்; (எ-று.) (வி-ம்.) கொழுநர் - கணவர். முன் செல்வம் இல்லாத அவர்- இதற்குமுன் பொருள் இல்லாதவர்; வறிஞர். பொருள்-செல்வம். யார்ஏனும்-ஒருவராவது, கலை - மேலாடை. நீவி - விலக்கி. இவ்வாறு கண்ணுறுதல் கலவி நிலையை நினைந்து மகிழ்தற்கென்க. (27) |