சோழவீரர் கலிங்கர் அற அழித்தது      | 470. | இவர்கள்மேல் இனியொருவர் பிழைத்தார் இல்லை |  |   |      எழுகலிங்கத்து ஓவியர்கள் எழுதி வைத்த 		சுவர்கள்மேல் உடலன்றி உடல்க ளெங்கும்      தொடர்ந்துபிடித் தறுத்தார்முன் அடைய ஆங்கே. |   	      				(பொ-நி.)  இவர்கள்  மேல்  ஒருவர்  பிழைத்தார்  இல்லை. எழுதி          வைத்த   உடல்  அன்றி  முன்  தொடர்ந்து  பிடித்து  உடல்கள்  அடைய         அறுத்தார்;  (எ-று.)      (வி-ம்.) இவர்கள் - மாற்றுருக்கொண்டு  பிழைத்தோர்.  ஓவியர்கள்     -சித்திரமெழுதுவோர். சுவர்கள்மேல்-மதில்களின் மீது.  தொடர்ந்து  பிடித்து     -பின்தொடர்ந்து சென்று பிடித்து வந்து. அடைய-முற்றும்.			                                                             (67)  |