சோழவீரர் கலிங்கர் அற அழித்தது 470. | இவர்கள்மேல் இனியொருவர் பிழைத்தார் இல்லை | | எழுகலிங்கத்து ஓவியர்கள் எழுதி வைத்த சுவர்கள்மேல் உடலன்றி உடல்க ளெங்கும் தொடர்ந்துபிடித் தறுத்தார்முன் அடைய ஆங்கே. | (பொ-நி.) இவர்கள் மேல் ஒருவர் பிழைத்தார் இல்லை. எழுதி வைத்த உடல் அன்றி முன் தொடர்ந்து பிடித்து உடல்கள் அடைய அறுத்தார்; (எ-று.) (வி-ம்.) இவர்கள் - மாற்றுருக்கொண்டு பிழைத்தோர். ஓவியர்கள் -சித்திரமெழுதுவோர். சுவர்கள்மேல்-மதில்களின் மீது. தொடர்ந்து பிடித்து -பின்தொடர்ந்து சென்று பிடித்து வந்து. அடைய-முற்றும். (67) |