கருணாகரன் குலோத்துங்கன் கழல் பணிந்தது
 
471.கடற்கலிங்கம் எறிந்து சயத் தம்பம் நாட்டிக்
       கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவாள் அபயனடி அருளி னோடுஞ்
      சூடினான் வண்டையர்கோன் தொண்டைமானே.

      (பொ-நி.)   வண்டையர்கோன்  (ஆகிய) தொண்டைமான்  எறிந்து,
நாட்டி,கவர்ந்து, அபயன் அடி சூடினான்; (எ-று.)

     (வி-ம்.) கடல்கலிங்கம்;  நாடு.  சயத்தம்பம் - வெற்றித்தூண், கடகரி
-மதயானை.  குவிதனம் - குவியலாக  உள்ள  பொருள்கள்.  அடிசூடினான்
-அடிகளை வணங்கினான்.
                                                          (68)