போர்க்களப் பெருமை 
472.தேவாசுரம் ராமாயணம் மாபாரதம் உளவென்று
  ஓவாஉரை ஓயும்படி உளதப்பொரு களமே.

     (பொ-நி.) அப் பொருகளம், தேவாசுர, ராமாயண,  மாபாரதம்  உள
என்ற  உரை  ஓயும்படி  உளது;  (எ-று.)

     (வி-ம்.) தேவாசுரம் - சூரபதுமன்  போர்.  ராமாயணம்  மாபாரதம்
அப்போர்களைக் குறித்து நின்றன. உள- சிறப்புற்றுப்பேச  உள்ளன.  ஓவா
-ஒழியாத.  உரை-சொல்.  உளது-சிறப்புற்றுளது.  பொருகளம் -கருணாகரன்
போர்க்களம்.
                                                            (1)