கலிங்கப்பேய் காளியைக் களம் காணுமாறு அழைத்தலும்
காளி களம் குறுகலும்  

473.காலக்கள மதுகண்டருள் இறைவீகடி தெனவே
  ஆலக்கள முடையான்மகிழ் அமுதக்களம் அணுகி.

     (பொ-நி.) களமது, கண்டருள் கடிதென; உடையான்  மகிழ்  அமுது,
களம் அணுகி; (எ-று.) 

     
(வி-ம்.) காலன் - யமன்.   இறந்த   உடல்களே   நிறைந்தமையின்
காலக்களமாயிற்று.   இறைவீ - காளியே.  கடிது - விரைவில்.  ஆலக்களம்
உடையான்- நஞ்சுபூண்ட  மிடற்றையுடைய  சிவன்.  மகிழ்  அமுது:  காளி.
அமுதத்தை     யொத்தவள்:     ஆகுபெயர்.     இதுவரை   மொழிந்த
செய்திகளெல்லாம் கலிங்கப் பேயின் கூற்றேயாவதைத் தெளிக.
                                                           (2)