காளி போர்க்களங்கண்டு வியந்துமொழிந்தது
 

474.என்னேஒரு செருவெங்களம்
      எனவேயதி சயமுற்று
அந்நேரிழை அலகைக்கண
     மவைகண்டிட மொழியும்.

      (பொ-நி.)  அந்  நேரிழை,  "களம் என்னே"  என  அதிசயமுற்று,
மொழியும்;  (எ-று.)

     (வி-ம்.) ஒரு- ஒப்பற்ற. செரு -போர். நேரிழை-காளி. அலகை-பேய்.
கணம்-கூட்டம்.
                                                           (3)