வீரர் முகமலர்ந்து கிடந்தமை 477. | விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண | | மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப் பருந்தினமும் கழுகினமும் தாமே யுண்ணப் பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின். | (பொ-நி.) விருந்தினரும் வறிஞரும் உண்ண, முகம் மலரும் மேலோர் போல, பருந்தினமும் கழுகினமும் உண்ண, முகமலர்ந்தாரைப் பார்மின்! (எ-று.) (வி-ம்.) வறியவர் - ஏழையர். நெருங்கி உண்ண - அடுத்தடுத்து உண்பதற்கு. மேலோர்: இல்லறத் துயர்ந்தோர். பதுமாம் - தாமரை. மலர்ந்தார்-மலர்ச்சிகொண்ட போர்வீரர்: வினையாலணையும் பெயர். (6) |